Tuesday, July 26, 2011

முகங்கள் .......


உடைந்த கண்ணாடி சில்களில் 
உன் முகத்தை பார் 
அது உன் முகத்தை உடைந்தே காட்டும் 
ஆனால் 
உடைந்த என் மனதில் 
உன் முகத்தை பார் 
அது உன் முகத்தை முழுவதும் காட்டும் 
உடைந்தது எனது மனம் 
உனது முகம் அல்ல 
போனது 
எனது ஜீவன் என்னுள் 
இருக்கும் உன் சுவாசம் அல்ல !!!!!! 

காதல் சொல்ல காத்திருக்கிறேன் !!


அருகில் இருந்தும் 
வார்த்தை இல்லை ! 
மொழி இருந்தும் 
பேச வில்லை ! 
கண்கள் பார்த்தும் 
பாசை புரியவில்லை ! 
கனவில் வந்தும் 
காதல் சொல்லவில்லை ! 
இன்று சொல்ல நினைக்கிறேன் 
கண்ணீரால் என் காதலை ! 
நீ மேல் உலகில் 
நான் கீழ் உலகில் ! 
என்னவளே என் காதல் சொல்ல 
காத்திருக்கிறேன் உன் நினைவோடு ! 
நானும் சொர்க்கம் வரும் வரை .......

உன் பிரிவின் வலி......


ரோஜா செடியில் இருந்து 
ரோஜா பூவை கில்லி 
பறிப்பதை போன்ற வலி.............

கோபப்படு............


தயவுசெய்து 
சந்தோஷத்திலும் - நீ 
கோபப்படு -உன் 
புன்னகையை விட 
கோபத்தையே 
நான் 
அதிகம் 
நேசிக்கிறேன்..............​..

அழகிய கோபம்.......


நீ என் மீது 

கோபம் கொள்ளும் 

அழகை ரசிக்கிறேன் ! 

உனக்கு என் மீது 

எவ்வளவு அன்பு என்று!

கனவு.............


உறங்காத இரவு 
மனம் கலங்கும் பொழுது 
உன் அன்பின் நினைவு 
உயிர்காக்கும் கனவு.............!

முடிவில்லாதது .......


காதல் 
முடிந்து விட்டது என்று 
என் முடிவை 
தேடினேன் 
ஆனால் 
முடிவில்லாதது 
காதல் என்று 
அறிந்தேன் உன்னிடம்..........